சுந்தர்.சி இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் வெளியாகிய படம் “அரண்மனை 3”. இந்த திரைப்படத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பு தயாரித்திருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமானது வெளியிட்டது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சுந்தர்.சி அரண்மனை-4 திரைப்படத்தை டைரக்டு செய்ய தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்குரிய பணிகளில் சுந்தர்.சி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதுவரை இந்த படம் குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.