தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் ராமநதி அணைக்கு சொல்லும் சாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விக்னேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.