பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கீரை, தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலி, காலிஃப்ளவர் உள்ளிட்டவைகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன. தக்காளி, குடைமிளகாய் உள்ளிட்ட பொருட்கள் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

பருவநிலை மாற்றம், எரிசக்தி விலையேற்றம், விநியோக சங்கிலியால் பிரச்சனை ஆகியவை தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் ஐரோப்பியா யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதே இந்த தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது. தக்காளி ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. முக்கிய இறக்குமதி இயந்திரமாக உள்ளது. அங்கு ஏற்பட்ட புயல் ஒட்டுமொத்தமாக விளைச்சலை மட்டுப்படுத்தியது. இதனால் பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி கடுமையாக அதிகரித்துள்ளதால் குளிர்கால காய்கறிகளை பகுமை குடிலில் விவசாயிகள் விளைவிக்கவில்லை. இதன் காரணமாகவும் பிரிட்டனில் விலை ஏற்றமும் தட்டுப்பாடும் நிலவுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு மற்ற நாடுகள் பிரிட்டன் உடனான வர்த்தகத்தை குறைத்துக் கொண்டுள்ளன.

இதனால் பிரிட்டனுக்கான விநியோக சங்கிலி பெரிதும் தடைபட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு மே மாதம் வரை நீடிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எரிசக்தி சார்ந்த தொழில்களுக்கான ஆதரவு திட்டத்தில் தோட்டக்கலை துறை சேர்க்கப்படாததால் இங்கிலாந்து விவசாயிகள் காய்கறி விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபடுவதில்லை. கடும் தட்டுப்பாட்டை தொடர்ந்து பிரிட்டன் மக்கள் இங்கிலாந்தில் அதிகம் விளையும் சிவப்பு முள்ளங்கிக்கு மாற வேண்டும் என அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.