ஆஸ்திரேலிய நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் நேற்று சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் 28 வயதுள்ள துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடிக்க நெருங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த நபர் போலீஸ்காரர்களையும் தாக்கம் முயன்று உள்ளார்.

இதனால் போலீஸ்காரர்கள் அவரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது “போலீசாரால் சுட்டுக் கொள்ளப்பட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரின் பெயர் முஹம்மது ரகமத்துல்லா சையது அகமது” என்று அடையாளம் கூறி இருக்கின்றனர்.