இந்தியாவின் பல்வேறு இடங்களில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லிக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல் ராகுல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது கே.எல் ராகுலுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றிலிருந்து விலகுவதாக கே.எல். ராகுல் அறிவித்தார்.

இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தகவலை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மருத்துவ குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு விரைவில் தேசிய அணிக்கு திரும்பும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இதனால் இனிவரும் ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் கே.எல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.