ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாகிஸ்தானில் ஆசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றால் நாங்களும் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் ஆசிய கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் ஆசிய கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடைபெறும் என மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் தற்போது இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இலங்கையில் போட்டி நடைபெற்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் ஆசிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேதி நேரில் சந்தித்து தங்களுடைய எதிர்ப்பை கூறியுள்ளனர்.