மத்திய அரசு துறையில் காலியாக இருக்கும் பன்முக உதவியாளர் ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களில் நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் 11,409 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் அவ்வப்போது கோளாறு ஏற்பட்டு விண்ணப்பிப்பதில் தடை இருந்ததால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வரை ஒருவார காலத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.