இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உயர்நிலைக் கல்வி கொண்ட விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையம் SSC CHSL என்ற வருடாந்திர தேசிய அளவிலான அரசாங்கத் தேர்வை நடத்துகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மத்திய அரசின் +2 கல்வி தகுதிக்கான SSC CHSL தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இதற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதத்தில் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) கணிணி வழியில் நடைபெறும். மே 9 முதல் ஜூன் 8ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 12ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.