நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இதில் சில நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் பேசியிருக்கிறார்.

75 வருட சாதனைகளை நினைவு கூர்ந்து அடுத்த கட்டமாக புதிய இலக்குகளை நோக்கி நாட்டினை கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அதேபோல இந்த கூட்டத்தொடரை உற்சாகமாக நடத்த அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். குறிப்பாக ஜி-20 மாநாட்டின் வெற்றி,  சந்திராயன் – 3 வெற்றி குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.