நாடாளுமன்ற கூட்டுத்தொடருக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சில நாட்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடர் நடந்தாலும் சிறப்பு கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திராயன் மூன்று திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய  விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். நாட்டின் உற்சாகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவில் மூவர்ண கொடியில் நிலவிலும் பறக்கிறது. 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.