கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கோபமடைந்த அவர் தன் வீட்டிற்கு தானே தீ வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். எனினும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இதற்கிடையில் வீட்டிற்கு தீ வைத்த கோபகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.