திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தனது மனைவியை வேறு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு சாமியாத்தாள் மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தன்னுடன் தனியே வேறு வீட்டில் வாழ்வதற்கு வர மறுத்த மனைவியை கொலை செய்துள்ளார். அதன் பின் அவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.