மலைப் பகுதியில் ஏறிக்கொண்டிருந்த மலை ஏறுபவர்கள், பிளாஸ்டிக் டப்பாவிற்குள் தலை சிக்கித் தவித்த ஒரு நரிக்குட்டியைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனி படர்ந்த அந்த மலைப் பகுதியில் உணவைத் தேடியபோது வீசப்பட்ட பிளாஸ்டிக் டப்பாவிற்குள் அந்த நரியின் தலை தற்செயலாகச் சிக்கிக் கொண்டதுடன் அதன் உடலில் பிளாஸ்டிக் உறைகளும் சுற்றியிருந்தன.
During the climb, mountaineers noticed a fox whose head was stuck in a plastic container and saved the animal’s life this way. 🦊⛰️pic.twitter.com/FW1ksuZ0ps
— Enezator (@Enezator) December 30, 2025
நகர முடியாமல் தவித்த அந்த நரிக்குட்டியைக் கண்ட மலை ஏறுபவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் அதனை நெருங்கி சில நொடிகளிலேயே அதன் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்றி உயிரைக் காப்பாற்றினர். விடுதலை பெற்ற அந்த நரிக்குட்டி உடனடியாகப் பனிப்பொழிவிற்குள் ஓடிச் சென்றது.
இந்தச் சம்பவம் மலை ஏறுபவர்களின் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்ட வைத்ததுடன், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் வனவிலங்குகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன என்பதையும் உலகுக்கு உணர்த்தியுள்ளது.
