தமிழகத்தில் வீடுகளில் புதிதாக பொருத்தப்பட உள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க படாது என TNEB தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரைவில் தமிழக முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.