கன்னியாகுமரியில் இருந்து கனிம வளம் ஏற்றி ஒரு லாரி சென்றது. அதே நேரம் குலசேகரத்தை சேர்ந்த ரவி என்பவர் தனது இரண்டு குழந்தைகளையும் காரில் பள்ளிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு சிறுமிகளும் காயமடைந்தனர். இரண்டு சிறுமிகளும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனிம வளம் ஏற்றி செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து நடைபெறுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.