விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் கிராமத்தில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி(11) அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை மகேஸ்வரி தூங்கி எழுந்து வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஸ்வரி தரைமட்ட கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி மாணவியை தேடியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.