கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிறந்து ஓரிரு நாளே ஆன குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.