விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனை குட்டம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தெரு நாய்கள் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேரை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நாய்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.