புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மனோகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.