கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கிராமம் வடக்குபாளையத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபாஷினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இரவு நேரம் என்பதால் டாக்டர்கள் பணியில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த செவிலியர் சுபாஷினிக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் சுபாஷினியை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.