தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தினை சிப்காட் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப் பூங்கா திட்டத்தையும் சிப்காட் வாயிலாக செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள இ.குமாரலிங்கபுரத்தை ஆடை பூங்கா அமைக்க தேர்வு செய்ததற்கு நன்றி. இ.குமாரலிங்கபுரத்தில் அமையும் ஆடை பூங்காவால் தென்மாநிலங்கள் பெரிதும் பயன்பெறும். சிப்காட் நிறுவனம் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தினால் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.