கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சட்ட விரோதமாக கடையில் புகையிலை, குட்கா விற்பனை செய்த சிவக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கடையில் இருந்த புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.