மும்பையின் செம்பூரில், 17 வயது கல்லூரி மாணவியை கும்பல் பலாத்காரம் செய்ததைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள், திங்கள்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரும் ஒரே கட்டிடத்தில் வசித்து வந்தனர். மேலும் 15 ஆம் தேதி இரவு, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அவரது பிளாட்டுக்கு சென்றுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு போதை கலந்த குளிர்பானத்தை அளித்து, மயக்கமடைந்த பின்னர் பாலியல்ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுத்தியதாக புகார் கூறுகிறது. சுயநினைவு திரும்பியதும், சிறுமி உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை உணர்ந்து, உடனடியாக தனது நண்பர்களுக்குத் தெரிவித்தார். பின் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் வாக்குமூலத்தை சேகரித்து, மேலும் பல நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய விரிவான விசாரணையை வலியுறுத்தி, அடுத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.