சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டயத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் சென்டரில் இருந்து நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

அதனைப் போலவே மறுமார்க்கமாக கோட்டயத்திலிருந்து நவம்பர் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் போத்தனூர் பாலக்காடு திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.