தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாண்டாஅள்ளியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அடிக்கடி சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.