கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கே நகர் பகுதியில் பட்டாபி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாந்தகுமார் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்படிப்புக்காக பாகலூர் சாலையில் இருக்கும் தனியார் கல்வி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நேற்று சாந்தகுமார் பயிற்சி மையத்திற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் தனியார் நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாந்தகுமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.