திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து பாலியல் குறித்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய்தபோது மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஊழியர்களான பார்த்திபன், சிவகிரி, ஏசுராஜ், தனசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளியின் முக்கிய நிர்வாகியான கருப்பையா மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.