நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தசரா மற்றும் தீபாவளி போன்ற விழாக்களை முன்னிட்டு வங்கியில் எடுக்கப்படும் லோன்களுக்கு செயலாற்ற கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கார் லோன், பர்சனல் லோன் மற்றும் கோல்ட் லோன் ஆகியவற்றத்தை இந்த சலுகை கிடைக்கும். அதேசமயம் வட்டியிலும் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.