தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடும் என்ற பயத்தில் அவர்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில் தற்போது 29 வயதாகும் நடிகை மெஹரின் திருமணத்திற்கு முன்பே தன்னுடைய கருமுட்டையை எடுத்து உறைய வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது திருமணம் எப்போது நான் செய்து கொள்வேன் என்பது எனக்கு தெரியாததால் இப்போதே கருமுட்டையை ‌ மருத்துவர்கள் உதவியுடன் சேகரித்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான ஒரு நீண்ட பதிவையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக நடிகர் ராம்சரணின்  மனைவி உபாசனாவும் கருமுட்டை சேகரிப்பின் மூலமாகத்தான் குழந்தை பெற்றதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by MEHREEN 🌟🧿 (@mehreenpirzadaa)