இந்தியாவின் முன்னணி வங்கியான SBI வங்கியில் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ATM, CDM இயந்திரங்களில், வாடிக்கையாளர்கள் பணத்தை எடுப்பதிலும், பணம் செலுத்துவதிலும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. 2ஆவது வாரம் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறையில் உள்ள சூழலில், சர்வர் பிரச்னையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.