பொதுவாகவே சில விலங்குகள் மனிதர்கள் மீது அதிக பாசம் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக நாய் என்பது மனிதர்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் தற்போது குரங்கு ஒன்று இறந்தவரோடு 25 கிலோ மீட்டர் பயணித்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராம் கன்வர் சிங் என்பவர் கடந்த சில மாதங்களாக குரங்குக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததால் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வாகனத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் அவரது உடல் மேல்படுத்தப்படியே வந்த குரங்கு இறுதி சடங்கு முடியும் வரை அங்கேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தது. இந்த சம்பவம் பார்ப்போரை கண் கலங்க செய்தது.