தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வான வீரங்கனைகளுக்கு சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டியானது துபாயில் நடந்தது. கடந்த மே 8-ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்த இந்த போட்டிகளில் இந்தியா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, மஸ்கட், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

துபாய் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்ற மாணவர்களில், கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களான கனித்ரா, தேவகர்ஷன், திவித் மற்றும் கல்லூரி மாணவர் கௌதம் உள்ளிட்ட 4 பேரும் தங்கப் பதக்கங்களை வென்று முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர். இந்நிலையில் யோகா போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவ-மாணவிகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.