
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, சனாதனம் கலாச்சாரம் வேறு. இந்து மதம் வேறு. இந்து மதத்திற்கு எதிரானவர்கள் திராவிடர்கள் அல்ல, திராவிட இயக்கங்கள் அல்ல. மதம் என்பது என்னது ? இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை. எப்படி இந்த பூலோகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்பதை இந்து மத நெறிகள் சொல்லுது. தர்மத்தை போதிக்க வேண்டும். அதர்மத்தை புறக்கணிக்க வேண்டும்.
சக மனிதர்கள் மட்டுமல்லாமல்… சக ஜீவராசிகளுக்கும் நாம் கருணை செலுத்த வேண்டும் என்பதுதான் இந்து வாழ்வியல் நெறிமுறை. அதே நேரத்தில் இன்றெல்ல… நேற்று அல்ல… கிட்டத்தட்ட 1000 கணக்கான வருஷங்களாக இந்து மதத்தை திரித்து, ஜாதிகளை மக்களிடையே… பிரிவினை உருவாக்கும் வகையில்…. ஜாதிகளை உருவாக்கி, நீ உயர்ந்த ஜாதி… நீ கீழ் ஜாதி… நீ தொட்டால் தீட்டு….. நீ கோவிலுக்கு வரக்கூடாது என்று மக்களுக்கு இடையே ஒரு பிரிவினையை உருவாக்கினார்கள்.
தந்தை பெரியார், பேரஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், எங்கள் இயக்க தலைவர் வைகோ, ஏன் ? அண்ணல் அம்பேத்கர் இவர்களெல்லாம் போராட்டம் எதற்காக.. ? இந்து மதத்திற்கு எதிராக அல்ல…. இந்து மதத்தில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களால்…. அதை திரித்து… அவர்களின் வசதிக்கு ஏற்றமாதிரி ஜாதியை ஏவுறது… பெண்கள் வீட்டைவிட்டு போகக்கூடாது…. பெண்களுக்கு கல்வி இருக்க கூடாது …… பெண்கள் கணவர்களை இழந்தால் உடன்கட்டை ஏற வேண்டும்.
இதுபோன்ற சில முறைகள் இருந்தன. அது காலங்காலமாக இருந்தது. இதை நிறுத்துனது திராவிடம். இது போல இருக்க கூடாது என அம்பேத்கர் நிறைய சட்டங்கள் கொண்டு வந்துருக்காங்க. இது போன்ற கலாச்சாரத்தை தான் சனாதன கலாச்சாரம் என்று… இது மாதிரிலாம் இருக்க கூடாதுனு சொல்லி தோழர் உதயநிதி அவர்கள் உரையாற்றினார்கள் என தெரிவித்தார்.