தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய அவர்,  காவிரியில் ஆண்டுதோறும்  50இல்  இருந்து 100 டிஎம்சி சராசரியாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடலில் வீணாக கலக்கின்றது. அதில் தர்மபுரிக்கு தேவையான நீர் மூன்று டிஎம்சி. சட்டமன்றத்திலே எத்தனை முறை வலியுறுத்தியும்…  முதலமைச்சரை எத்தனையோ முறை சந்தித்தும்….  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பலமுறை அழுத்தம் கொடுத்தும்…  எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும்…  அத்தனை கட்சிகளும் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

தர்மபுரியில் அனைத்து கட்சியும் இந்த கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அப்படி வைத்தும் இன்னும் இந்த திட்டத்தை  முதலமைச்சர் அவர்களோ… மற்ற அமைச்சர்களோ இது பத்தி பேசாதது எங்களுக்கு வருத்தம். இதை உடனடியாக அறிவிக்க வேண்டும், நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் . சனாதன முக்கிய பிரச்சனை அல்ல. சனாதனத்தை விட முக்கிய பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.