பெங்களூருவில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கெய்க்வாட்டின் 80-வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60-வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்க மழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன். இறைவனுக்கு நன்றி..! என தெரிவித்துள்ளார்.