நடிகர் தனுஷ் நடிப்பில் “வாத்தி” திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் Sir என்ற பெயரில் ரிலீஸ் ஆன இப்படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. மற்றொருபுறம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு புதிய வீட்டை கட்டிவந்தார்.

அதற்கான பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் தனுஷ் புது வீட்டுக்கு சென்றுள்ளார். புது வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் அவரது அப்பா-அம்மா என குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தனுஷ் வீட்டை மிக பிரமாண்டமாக கட்டியுள்ளார் என சொல்லி வருகின்றனர்.