தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 8.50-க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட் முதல் 17,500 மெகா வாட் வரை இருக்கிறது. கோடையில் இது 18,500 மெகா வாட் ஆக அதிகரிக்கலாம். அதனை ஈடு செய்ய தனியாரிடம் இருந்து கூடுதல் மின்சாரம் வாங்கப்பட இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.