தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இதில் பாஜக நிர்வாகி நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து பல முக்கிய புள்ளிகளும் கட்சி மாறி வருகின்றனர். இதனை எதிர்த்து பேசிய அண்ணாமலை, எல்லாவற்றிற்கும் எதிர்வினை உண்டு என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் கோவில்பட்டியில் இபிஎஸ் உருவ பொம்மையை பாஜகவினர் எரித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரே கூட்டணியில் இருக்கும் அதிமுக-பாஜகவினர் இடையே மோதல் போக்கு முற்றுவதை இது காட்டுகிறது.