விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா அனுப்பிய நபருக்கு வேலை தர முடியாது என்று மூர்த்தி கூறிவிடுகிறார். இந்த விஷயம் குறித்து திரும்பி வந்து ஜீவாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார். இதையடுத்து நேற்றைய எபிசோடில் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குள் வருகிறார். தனம் மற்றும் முல்லையை நலம் விசாரித்து விட்டு ஜீவாவின் சர்டிபிகேட்களை வாங்கி செல்கிறார்.

எனினும் ஜீவா வீட்டுக்குள் வராமல் வெளியில் கார் அருகே நிற்கிறார். அதன்பின் தனம் வெளியே வரும்போது கூட ஜீவா ஒரு வார்த்தைகூட பேசாமல் நின்றுவிட்டு கிளம்பி சென்று விடுகிறார். ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமென கண்ணன் திட்டமிட்டு கொண்டிருக்கிறார். அதற்காக செலவுக்கு என்ன செய்வது என்று குழப்பத்தில் இருவரும் இருக்கின்றனர்.

இதற்காக சேனலில் வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம் என்றால் அந்த அளவுக்கு லைக்குகள் கிடைக்கவில்லை. இதனால் எதாவது செய்து சேனலுக்கு அதிகம் லைக்குகள் கொண்டுவர வேண்டும் என நினைத்து டான்ஸ் வீடியோ போடலாம் என கூறுகிறார் ஐஸ்வர்யா. கர்ப்பமாக இருக்கும்போது வேண்டாம் என சொல்லாமல் கண்ணனும் அதற்கு ok சொல்கிறார்.

அதன்படி இரண்டு பேரும் பார்க்கில் டான்ஸ் ஆடும் நேரத்தில் ஐஸ்வர்யா தவறி கீழே விழுந்து விடுகிறார். அந்த சமயத்தில் எதுவும் ஆகாததால் வீட்டுக்கு வந்து விடுகின்றனர். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்படுகிறது. அவரை கண்ணன் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். ஐஸ்வர்யாவுக்கு என்ன ஆகும்? என்பது அடுத்தக்கட்ட எபிசோடில் தெரியவரும்.