தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் குந்தவையின் கம்பீரத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என கூறியுள்ளார். அதாவது இயக்குனர் மணிரத்தினம் குந்தவை கதாபாத்திரத்திற்கு நடிகை ஜெயலலிதாவை நினைத்துக் கொள் என்று கூறியுள்ளார். நாம் அனைவருமே சென்னையில் சேர்ந்தவர்கள்.

ஜெயலலிதாவின் படங்களை பார்த்திருக்கிறோம். முதல்வராக அவர் எப்படி என பார்த்திருக்கிறோம். எனவே திரிஷாவாக இருப்பதை நிறுத்திவிட்டு ஜெயலலிதா போல் மாற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி வைத்துக் கொள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஜெயலலிதாவின் படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை திரிஷா பார்த்து அவரின் நடை, உடை, பாவணைகள் போன்றவற்றை உள்வாங்கியுள்ளார். நானும் அவரை போன்று நடந்து கொள்ள கற்றுக் கொண்டேன். ஜெயலலிதா ஒரு ராணி போன்று இருந்தார் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை திரிஷாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.