நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு சமையல் வேலைக்காக துபாய் சென்றார். இதனால் ஆர்த்தி மற்றும் ப்ரீத்தியை அவர்களது பாட்டி ராணி பராமரித்து வந்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக அந்தோணியம்மாள் தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பிறகு அந்தோணியம்மாள் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. அவரது நிலை தற்போது என்ன என்பது தெரியவில்லை. இதனால் ஆர்த்தியும், பிரத்தியும் துபாயில் சிக்கி தவிக்கும் தங்களது தாயை மீட்டு தர தமிழக அரசும், வெளியுறவு துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.