கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயிர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.

இந்நிலையில் அது தொடர்பான இரண்டு வழக்குகளில் நேற்று ஒரு வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கும்,  அவரது மனைவிக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதை ரத்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவு இன்று கிடைத்த சாதகமான உத்தரவு என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை.  ஆனால் 2016 ஆம் ஆண்டு அவருக்கு சாதகமாக தான்  விழுப்புரம் நீதிமன்ற உத்தரவு அமைந்திருக்கிறது. அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டதை விடுவிக்க வேண்டும் என்று கிழமை நீதிமன்றம் உத்தரவு மூலம் தான்…. 2016 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை அவர் அனுபவித்தது கொண்டு தான் வருகிறார்.

அப்போது இருந்து இந்த சொத்துக்களை அனுபவித்து வருவது,  கூடுதலாக தான் தொடர்மே தவிர… புதிதாக ஒரு நிவாரணம் கிடைத்ததாக கூற முடியாது. இது லஞ்ச ஒழிப்பு துறைக்கு பின்னடைவாக தான் கருதப்படும்.  ஏனென்றால் பிரதான வழக்கு முடியும் வரை அந்த சொத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் தான் அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை லஞ்ச ஒழிப்பு துறை எடுக்கின்றது. அந்த நடவடிக்கை தேவையில்லை. பிரதான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இந்த முடக்கம் தேவையில்லை என்று தான் கிழமை  நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

ஆனால் உயர் நீதிமன்றத்தை பொறுத்தவரை…..  கிழமை நீதிமன்றம் விடுவித்தது  தவறு என்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் அந்த பிரதான வழக்கே  முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, இந்த சொத்துக்களை மீண்டும் முடக்க வேண்டும் என்பது ஒரு அவசியமில்லை என்று நீதிமன்றம் கருதியதாக  தான் தற்போது புரிந்துகொள்ள முடியும். இருந்தாலும் எதன் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டாலும்,  சொத்துக்கள் ஏன் மீண்டும் முடக்க வேண்டாம் என தனது உத்தரவில் நீதிபதியை விரிவாக விளக்கம் அளித்து  இருப்பார். அவ்வாறு எந்த அடிப்படையில் மீண்டும் முடக்க வேண்டாம் என்ற தகவல் தீர்ப்பு முழு விவகாரம் வெளியாகும் போது தெரிய வரும்.