இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக தகவல் பரவி வரும் நிலையில், ரயில்வே போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 3 மணிநேர சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.