தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அண்மையில் இவர் தன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து கும்பகோணம் அடுத்த மேல்வழுத்தூர் கிராமத்திலுள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இதுகுறித்து அறிந்த அந்த ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாக நயன்தாராவை பார்க்க திரண்டு வந்ததால் அங்கு சற்று பதற்றம் நிலவியது.

இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு முடித்தபின் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஐராதீஸ்வரர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பின் வெளியில் வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்நிலையில் தோள் மீது கை வைத்த மாணவியிடம் நயன்தாரா கோபப்பட்டார். மேலும் திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறியபோது செல்போனில் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரிடம் என்னை படம் எடுக்காதீர்கள் என கோபமாக கத்தியுள்ளார் நயன்தாரா. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

https://twitter.com/kamaleshjisettu/status/1644013684644274177?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1644013684644274177%7Ctwgr%5E677c6d2ae3a86e9e3556bc7fe68114ad62318a45%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fnayanthara-tension-with-fans-activities-gone-viral%2F217221%2F