பாலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகிய கிஸி கி பாய் கிஸி கி ஜான் படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ஹிந்தி சினிமா துறைக்கு வந்திருக்கும் இளம்நடிகர்கள் பலரும் திறமையானவர்களாக இருக்கின்றனர்.

அதோடு கடினமாக உழைக்கிறார்கள். இதனால் சீனியர் நடிகர்களான எங்களை குறைத்து மதிப்பிடவேண்டாம். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து சவாலாகதான் இருப்போம். நானும், ஷாருக்கான், அஜய்தேவகன், அமீர்கான், அக்ஷய் குமார் போன்றோரும் அவ்வளவு சுலபமாக சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.