உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் மாநிலத்தின் வளர்ச்சி, சட்டஒழுங்கு, நாட்டின் அரசியல், ராகுல் காந்தியின் யாத்திரை போன்றவை குறித்து பேசினார். மேலும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு பற்றியும் தகவல் தெரிவித்து உள்ளார்.

அதாவது, கோயில் கட்டுமானப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறித்த நேரத்திற்குள் கோயில் கட்டுமானம் நிறைவடையும். பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் ராமர் தனது கோயிலில் அமரப் போகிறார். இது நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமைக்குரிய நாள் என்று கூறினார்.