டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிய “புஷ்பா” படம் வெற்றிகரமாக ஓடி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்போது இந்த படத்தின் 2-ஆம் பாகமான “புஷ்பா தி ரூல்” படத்தின் சூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவானது வெளியிட்டு இருக்கிறது. அதில் புஷ்பா சிறையிலிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் புது அறிவிப்பு வரும் 7ம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோவில் தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
#WhereIsPushpa ? (Tamil)
The search ends soon!The HUNT before the RULE 🪓
Reveal on April 7th at 4.05 PM 🔥#PushpaTheRule ❤️🔥 pic.twitter.com/t7GzeoTsyY— Mythri Movie Makers (@MythriOfficial) April 5, 2023