கர்நாடகாவில் உள்ள கலபுர்கி என்ற பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் நக்கினால் செத்து விடுவீர்கள் என்று கூறினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் கார்கே தான் பேசியதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். நான் பிரதமரை தனியாக விமர்சிக்கவில்லை. அவருடைய சித்தாந்தம் பாம்பு போன்றது. அதை தொட  முயன்றால் மரணம் நிச்சயம் என்று தான் சொல்ல வந்தேன் என விளக்கம் அளித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பிரதமர் மோடி பற்றி விமர்சித்து பேசியதற்கு பாஜகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.