தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தை தியேட்டரில் பார்த்த பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசினார் . அவர் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை நான் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். அந்த வகையில் தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் பொன்னியின் செல்வன் படம் அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்குவதற்கே தனி துணிச்சல் வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்ததற்காக இயக்குனர் மணிரத்தினத்திற்கு என்னுடைய பாராட்டு. அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நட்சத்திர பட்டாளங்களையும் படத்தில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. வட மற்றும் தென்னாட்டில் இருந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. போற்றப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார். மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த 28-ஆம் தேதி வெளியான நிலையில் 400 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது