திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, முதல்ல இளைஞணிக்கு பாசறை கூட்டம் நடத்துங்கள். இன்னைக்கு இருக்கிற பிரச்சனை என்ன என்பதை  சொல்லுங்க. நாங்க எல்லாம் 18 வயசு,  13 வயசுல அதை படிச்சது காரணத்தினால் தான் இந்த கட்சியில் 77 வயசாகியும் ஒரே கட்சியில் இருக்கிறோம். அது போல ஒரு வட்டத்துக்கு 10 பசங்களை  தயார் பண்ணுங்க. நாம் யார் ? இந்த கட்சி என்ன ? எப்படி துவக்கப்பட்டது ? சனாதனம் என்றால் என்ன ?  சுயமரியாதை என்றால் என்ன ? பாதி பேரு தெறிச்சி ஓடுறான்.

இந்து மதத்திற்கு நாமெல்லாம் விரோதிகள் என்று…. எலக்சன்ல அத தான் சொல்ல போறாங்க. ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்….  எங்களை இந்துக்கள் இல்லை என்று சொன்னால் ? நாட்டிலேயே எவனும் கிடையாது. காரணம் நாங்க தான் மெஜாரிட்டி. கோயிலுக்கு போறவனும் எங்க ஆளுங்க தான் அதிகம். எல்லா கோவிலிலும் கூட்டம்  எப்போ வந்தது ?

திமுககாரன் கோயிலுக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் கோயிலில் கூட்டமே கூடுச்சு. இந்த கூட்டத்தில் பாரு பேருக்கு மேல நெற்றில் திருநீறு வைத்துள்ளான்.. இதுல என்ன தப்பு ? கைல கயிறு கட்டிக்கிட்டு இருக்காங்க? நாங்க என்ன வேணும்ன்னா சொல்லுறோம்.. நான் ஹிந்து இல்லையா ? உங்களை விட அசல் ஹிந்து நாங்க தான்.காரணம் என்னனு கேட்டா ? சாமிக்கும் நாங்க தான் ஒழுங்கா பூஜை பண்றோம். பயபக்தியா நடந்துகிறோம். கோவிலுக்குள்ளே கொலை பண்ணுறவுங்க நாங்க கிடையாது என தெரிவித்தார்.